sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உலக தமிழர்

/

வளைகுடா

/

செய்திகள்

/

ஹாஜிகளின் நலனுக்காக சவூதியில் TNTJ இரத்ததான முகாம்

/

ஹாஜிகளின் நலனுக்காக சவூதியில் TNTJ இரத்ததான முகாம்

ஹாஜிகளின் நலனுக்காக சவூதியில் TNTJ இரத்ததான முகாம்

ஹாஜிகளின் நலனுக்காக சவூதியில் TNTJ இரத்ததான முகாம்


மே 25, 2024

Google News

மே 25, 2024


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சவூதி அரேபியா:- தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ) ரியாத் மண்டலம் சார்பாக நடைபெற்ற இரத்ததான முகாமில், தமிழ் பேசும் சகோதரர்கள், பிற மாநில சகோதரர்கள், பிற நாட்டு சகோதரர்கள் மற்றும் அதிகமான தன்னார்வ தொண்டர்கள் இணைந்து இந்த புனிதமான ஹஜ் மாதத்தில் ஹாஜிகளுக்கு உதவும் வகையில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டனர்.

24-05-2022, வெள்ளிக்கிழமை ரியாத் மாநகரில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ) மற்றும் கிங் சவூத் மெடிக்கல் சிட்டி (KFMC) இணைந்து நடத்திய 152 -வது மாபெரும் இரத்ததான முகாம் சிறப்பாக நடைபெற்றது, இந்த முகாமில் (75) குருதி கொடையாளர்கள் பதிவு செய்து (68) நபர்கள் இரத்த தானம் செய்தனர்.


இந்த நிகழ்ச்சியில் பேசிய, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் ரியாத் மண்டல இரத்ததான ஒருங்கிணைப்பாளர் ஷேக் பிரேம் நவாஸ், இந்த இரத்ததான முகாம்கள் நடத்துவதின் நோக்கத்தை கூறும்போது, “இஸ்லாம் என்றாலே பிறர் நலம் நாடுதல்” என்ற உயரிய நோக்கத்தை திருக்குர்ஆன் வசனம் கூறும்“யார் ஒரு மனிதரை வாழ வைக்கிறாரோ, அவர் உலக மக்கள் அனைவரையும் வாழ வைத்தவர் போலாவார்” (அல்குர்ஆன் 5:32) குறிப்பிட்டுக் காட்டி அதன் மூலம் இஸ்லாம் மற்றும் முஸ்லிம்கள் மனிதத்தை நேசிக்கக் கூடியவர்கள், பிறர் நலம் பேணக்கூடியவர்கள் என்றும், ஏக இறைவனிடத்தில் மட்டுமே இதற்குரிய நற்கூலியை எதிர்பார்த்தவர்களாகவும், இந்த மகத்தான பணிகளை செய்து வருவதாகக் கூறினார்.


மேலும், இம்முகாம் குறித்து பேசிய ரியாத் மண்டலத் தலைவர் செய்யது இப்ராஹீம் “கடுமையான வெயிலையும் பொருட்படுத்தாமல் அதிகமான சகோதரர்கள் ஆர்வத்துடன் வந்து தங்கள் குருதியை தானம் செய்தனர். . இந்த வருடம் சவுதி அரசு அதிகமான ஹஜ் பயணிகளை அனுமதித்துள்ளதால், அவர்களின் தேவைகளுக்காக இந்த மனிதநேய உதவியை TNTJ தொண்டர்களும், குருதிக் கொடையளிப்பவர்களும் சந்தோஷத்துடனும், தன்னார்வத்துடன் அதிக அளவில் கலந்து கொண்டு இம்முகாமை சிறப்பித்திருந்தனர்.


மேலும் செய்யது இப்ராஹீம் பேசுகையில், இந்த உயிர் காக்கும் மகத்துவமான பணி என்றும், இதுபோன்ற நற்பணிகள் இந்திய தேசத்தின் சகோதரத்துவத்தையும், அன்பையும் போற்றும் விதத்தில் அமைந்தது. மேலும் நம் இந்திய தேசத்தின் பன்முகத்தன்மையை பிரதிபலித்து இந்தியர்களின் தியாகங்களையும், தேசப்பற்றையும் பிறநாடுகளில் பறைசாற்றும் விதமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த மாபெரும் இரத்ததான முகாம் மனிதநேயத்தை வார்த்தைகளால் மட்டுமல்லாமல் தங்களின் குருதி தியாகத்தாலும் வெளிப்படுத்தியிருந்தது மிகவும் நெகிழ்ச்சி அடையச் செய்துள்ளது என்று தெரிவித்திருந்தார்.


இந்த முகாமில் அனைத்து ஏற்பாடுகளையும், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் ரியாத் மண்டலம் மற்றும் கிளை நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர். ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்த அனைத்து நிர்வாகிகளுக்கும் மருத்துவமனைகளின் இயக்குனர் நன்றி தெரிவித்தார்.



Advertisement

Advertisement


Advertisement

Trending


வாசகர்கள் நேரடியாக செய்தி மற்றும் படங்கள் அனுப்ப nrinews@dinamalar.in



      Dinamalar
      Follow us