/
உலக தமிழர்
/
வளைகுடா
/
செய்திகள்
/
பிப்., 26 முதல் துபாயில் உலகின் மிகப்பெரிய புத்தக கண்காட்சி
/
பிப்., 26 முதல் துபாயில் உலகின் மிகப்பெரிய புத்தக கண்காட்சி
பிப்., 26 முதல் துபாயில் உலகின் மிகப்பெரிய புத்தக கண்காட்சி
பிப்., 26 முதல் துபாயில் உலகின் மிகப்பெரிய புத்தக கண்காட்சி
பிப் 14, 2026

துபாய் : துபாய் நகரின் ஸ்டுடியோ சிட்டியில் உலகின் மிகப்பெரிய புத்தக கண்காட்சி வரும் 26 ந் தேதி தொடங்குகிறது. இந்த கண்காட்சியை பிக் பேட் வொல்ப் நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது. துபாய் உள்ளிட்ட அமீரகத்தில் பொதுமக்கள் மத்தியில் வாசிப்பை மேம்படுத்தும் வகையில் வரும் 26 ந் தேதி புத்தக கண்காட்சி தொடங்குகிறது. இந்த கண்காட்சி அடுத்த மாதம் மார்ச் 8 ந் தேதி வரை தினமும் காலை 10 மணி முதல் நள்ளிரவு 2 மணி வரை நடைபெறும்.
துபாய் கலாச்சாரத்துறை, சார்ஜா புத்தக ஆணையம் உள்ளிட்ட அரசுத்துறைகளின் ஆதரவுடன் இது நடக்கிறது. இந்த கண்காட்சியில் பொதுமக்கள் 2 திர்ஹாம் முதல் புத்தகங்களை வாங்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த கண்காட்சியை பார்வையிட அனுமதி இலவசம். கார் நிறுத்தும் இடம் உள்ளிட்ட வசதிகளும் உள்ளன.
- துபாயிலிருந்து நமது வாசகர் ராம்குமார்
Advertisement

