sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உலக தமிழர்

/

சிங்கப்பூர்

/

செய்திகள்

/

சிங்கப்பூர் ஆலயத்தில் கார்த்திகை முதல் சோம வார வழிபாடு கோலாகலம்

/

சிங்கப்பூர் ஆலயத்தில் கார்த்திகை முதல் சோம வார வழிபாடு கோலாகலம்

சிங்கப்பூர் ஆலயத்தில் கார்த்திகை முதல் சோம வார வழிபாடு கோலாகலம்

சிங்கப்பூர் ஆலயத்தில் கார்த்திகை முதல் சோம வார வழிபாடு கோலாகலம்


நவ 19, 2024

Google News

நவ 19, 2024


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிங்கப்பூர் மார்ஷலிங் ஸ்ரீ சிவ கிருஷ்ணர் ஆலயத்தில் கார்த்திகை முதல் சோம வார பூஜை நவம்பர் 18 ஆம் தேதி வெகு விமரிசையாக நடைபெற்றது. மாலை நித்ய பூஜையைத் தொடர்ந்து ஆறு மணிக்குத் தலைமை அர்ச்சகர் நாகராஜ சிவாச்சாரியார் யாக சாலை பூஜையைத் தொடங்கினார். திரளான பக்தப் பெருமக்கள் பங்கேற்ற யாக சாலை பூஜைகள் கண்கொள்ளாக் காட்சியாக நடைபெற்றன.
ஸ்ரீ விஸ்வநாதப் பெருமான் சர்வ அலங்கார நாயகராக எழுந்தருளி அருள்பாலித்தபோது மகா தீபாராதனை மிளிர்ந்தது. மாலை 6 45 க்கு நடைபெற்ற சிறப்பு அபிஷேகத்தை அடுத்து 7.15 மணிக்கு 108 சங்காபிஷேகம் பக்தப் பெருமக்களின் சரண கோஷத்திடை மெய்சிலிர்க்க வைத்தது. மகா தீபாராதனைக்குப் பின் அருள் பிரசாதம் பெற்ற பக்தப் பெருமக்களுக்கு அன்னப் பிரசாதம் வழங்கப்பட்டது.
மீண்டும் 25.11.24 -02.12.24 -09.12.24 ஆகிய நாட்களிலும் சோம வார விசேஷ பூஜைகள் நடைபெறுமெனவும் திரளாகப் பக்தப் பெருமக்கள் கலந்து கொள்ளவும் ஆலய நிர்வாகம் அன்புடன் அழைக்கிறது.

- நமது செய்தியாளர் வெ.புருஷோத்தமன்



Advertisement

Advertisement


Advertisement

Trending


வாசகர்கள் நேரடியாக செய்தி மற்றும் படங்கள் அனுப்ப nrinews@dinamalar.in



      Dinamalar
      Follow us