/
உலக தமிழர்
/
சிங்கப்பூர்
/
செய்திகள்
/
சிங்கப்பூரில் முன்னாள் மாணவர் சந்திப்பு
/
சிங்கப்பூரில் முன்னாள் மாணவர் சந்திப்பு
பிப் 24, 2026

சிங்கப்பூரில் திருநெல்வேலி சங்கர் பாலிடெக்னிக் முன்னாள் மாணவர் சங்கம் சார்பில் மாணவர் சந்திப்பு சிறப்பாக நடைபெற்றது.
பல ஆண்டுகளுக்கு பிறகு ஒன்றுகூடிய பழைய மாணவர்கள் தங்கள் கல்லூரி நாட்களின் இனிய நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.
நிகழ்ச்சிக்கு முன்னாள் மாணவர் ஜெகராஜன் தமிழ் நாட்டிலிருந்து வந்து சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். கல்லூரி முன்னாள் மற்றும் தற்போதைய பேராசிரியர்கள் வீடியோ கான்பரன்ஸ் வழியாக வாழ்த்துகளையும் ஆலோசனைகளையும் வழங்கினர். கல்லூரி வளர்ச்சிக்காக முன்னாள் மாணவர்கள் தொடர்ந்து ஆதரவு வழங்க வேண்டும் என்று அவர்கள் தெரிவித்தனர்.
இந்த சந்திப்பில் பல்வேறு கலாச்சார நிகழ்ச்சிகள், நினைவுப் பகிர்வு, பாராட்டு வழங்கல் போன்றவை நடைபெற்றன.
நிகழ்ச்சியின் முடிவில் ஏற்பாட்டாளர்களுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.
- சிங்கப்பூரிலிருந்து நமது வாசகர் அண்ணாமலை
Advertisement

