/
உலக தமிழர்
/
அமெரிக்கா
/
செய்திகள்
/
ஸ்ரீ காஞ்சி மஹா பெரியவா 131வது அனுஷம் ஜெயந்தி
/
ஸ்ரீ காஞ்சி மஹா பெரியவா 131வது அனுஷம் ஜெயந்தி
மே 25, 2024

உம்மாச்சி தாத்தா என்று செல்லமாக குழந்தைகளாலும் மஹா பெரியவா என்று அனைத்து பக்த கோடிகளால் அன்புடன் அழைக்கப்படும் காஞ்சி ஸ்ரீகாமகோடி பீடத்தின் 68வது பீடாதிபதியானஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகளின் 131-வது அவதார ஜெயந்தி தினம் மஹா பெரியவா பக்தர்களால் வெகு விமரிசையாக நாடு முழுதும் கொண்டாடப்பட்டது.
புது தில்லி : அருணா அசப் அலி சாலையில் அமைந்துள்ள ஸ்ரீ தேவி காமாக்ஷி மந்திரில் ஸ்ரீ காஞ்சி மஹா பெரியவா 131வது அனுஷம் ஜெயந்தி மிக விமரிசையாக கொண்டாடப்பட்டது. காலை விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கியது. இதைத் தொடர்ந்து, சங்கல்பம், புண்யாஹவசனம், கலச ஸ்தாபனம், மஹன்யாஸ பாராயணம், ஏகாதச ருத்ர ஜபம், ஸ்ரீருத்ரநாம த்ரிஸதீ நாமார்ச்சனை, ஸிவாஷ்டோத்தர ஸத நாமாவளி மற்றும் கலச அபிஷேகம் நடைபெற்றது. ரித்விக்குகள் இதில் திரளாக பங்கேற்று ருத்ர பாராயணம் செய்தனர்.
கோவிலில் அமைந்துள்ள ஆதிசங்கரர் ஸ்வாமிக்கு அபிஷேகம் செய்து சிறப்பு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. தோடகாஷ்டகம் சொல்லி நிகழ்ச்சி நிறைவு செய்ய பெற்றது. பக்தர்கள் திரளாக இதில் கலந்து கொண்டனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.
மாலை உபநிஷத் வேத பாராயணம், பாதுகை பூஜை நடைபெற்றது. இதைத் தொடர்ந்து ஸ்ரீ மஹா பெரியவா படத்தை மேளதாளங்கள் முழங்க ஏந்தியவாறு கோவில் உள் பிரகாரத்தை சுற்றி ஊர்வலமாக பக்தர்கள் எடுத்து வந்தனர்.
- நமது செய்தியாளர் எம்.வி.தியாகராஜன்
Advertisement