sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உலக தமிழர்

/

அமெரிக்கா

/

செய்திகள்

/

நியூஜெர்சியில் உலகப் பெண் கவிஞர் பேரவையின் பன்னூல் வெளியீட்டு விழா!

/

நியூஜெர்சியில் உலகப் பெண் கவிஞர் பேரவையின் பன்னூல் வெளியீட்டு விழா!

நியூஜெர்சியில் உலகப் பெண் கவிஞர் பேரவையின் பன்னூல் வெளியீட்டு விழா!

நியூஜெர்சியில் உலகப் பெண் கவிஞர் பேரவையின் பன்னூல் வெளியீட்டு விழா!


ஏப் 25, 2024

Google News

ஏப் 25, 2024


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உலகப் பெண் கவிஞர் பேரவை உறுப்பினர்கள் எழுதிய நூல்கள் மற்றும் மொழியாக்க நூல் வெளியீட்டு விழா ஏப்ரல் 20, 2024 அன்று அமெரிக்காவின் நியூஜெர்சி மாநிலத்தில் உள்ள பிளைன்ஸ்பரோவில் அதியாத்மா நிகழ்கலைப் பள்ளியில் இனிதே நடந்தேறியது. இந்த நிகழ்ச்சியில் கலைமாமணி முனைவர் அமிர்தகணேசன் (அகன்) கலந்துகொண்டு 10 பெண் எழுத்தாளர்களின் புத்தகங்களை வெளியிட்டுச் சிறப்புரை ஆற்றினார்.

கவிஞர் விஸ்வசாந்தி எழுதிய “கலர் கோழிக்குஞ்சு” என்னும் சிறார் நூல், கவிஞர் சாந்தி சந்திரசேகர் எழுதிய “பாப்பாவுக்குப் பறவைப் பாட்டு”என்ற பறவைகள் மீதான நூல், கவிஞர் இரம்யா நடராஜன் எழுதிய “வீட்டில் விளையாடலாம் வாங்க” கட்டுரை நூல், கவிஞர் பவளசங்கரி எழுதிய “சிந்தனைத் தாக்கங்கள்” கட்டுரை நூல், முனைவர் வேல்விழி எழுதிய “முதல் மலர் மணம்”, முனைவர் சுவர்ணா முத்துக்கிருஷ்ணன் எழுதிய “கண்ணம்மாவின் மடல்கள்” மற்றும் “என் பெயர் ரங்கநாயகி” என்ற கவிதை நூல்கள் , கவிஞர் மஞ்சு எழுதிய “கன்னம் கிள்ளிப் போனால்” கவிதை நூல், கவிஞர் உமா பால்ராஜ் எழுதிய “எழுதித் தீரா வலி” போர்க்கால மழலையர் நூல், கவிஞர் இராஜி வாஞ்சி எழுதிய “ஏன் விரட்டினீர்கள் எங்களை” பயணக் கவிதை நூல் மற்றும் கவிஞர் மேனகா நரேஷ் மொழிபெயர்த்த கவிஞர் சொல்லாக்கியன் எழுதிய “துளிமொழி” என்ற ஹைக்கூ கவிதை நூலின் ஆங்கில வாக்கம் உள்ளடக்கிய “Wordlet” ஆகிய நூல்கள் இந்த நிகழ்ச்சியில் வெளியிடப்பட்டன.


துளி மொழி என்ற நூலின் ஆங்கிலவாக்கம் குறித்த ஆய்வுரையைக் கவிஞர் கனிமொழி மிகச் சிறப்பாக வழங்கினார். நரேஷ் குமார் வரவேற்புரை வழங்கினார். கவிஞர் மேனகா நரேஷ் ஏற்புரையும் நன்றியுரையும் வழங்கி நிகழ்ச்சியை நிறைவு செய்தார்.

அயல்நாட்டு மண்ணில் நம் தமிழ்நாட்டுப் பெண்கள் படைத்த நூல்கள் வெளியானது மிகவும் பெருமைக்குரிய நிகழ்வு! ஈரோடு தமிழன்பன் எனும் மகாகவியின் நூல்களை எல்லாம் தொகுத்து, “எரிதழலும் இளங்காற்றும்” எனும் ஒரு பெரும் நூலைப் படைத்து, இமாலய சாதனை நிகழ்த்திய முனைவர் அகன் இந்த நிகழ்வையும் சாத்தியமாக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது தமிழ்ப்பணி மேன்மேலும் தொடரத் தமிழ்த்தாய் அருள்வாளாக!


- தினமலர் வாசகி மேனகா நரேஷ்


Advertisement

Advertisement


Advertisement

Trending


வாசகர்கள் நேரடியாக செய்தி மற்றும் படங்கள் அனுப்ப nrinews@dinamalar.in



      Dinamalar
      Follow us