
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* பயனில்லாத ஒரு வார்த்தை கூட வாயில்இருந்து வெளிவருதல் கூடாது. இதற்கு மிகுந்த விழிப்புணர்வு தேவை.
* தெய்வ வசத்தால் தானாகக் கிடைத்ததை கொண்டு மகிழ்ச்சியோடு வாழக் கற்றுக் கொள்ளுங்கள்.
* உலகம் போற்றினாலும், பழி தூற்றினாலும் மனதில் வாங்கிக் கொள்ளக் கூடாது. நடுநிலையில் இருக்கப் பழகுங்கள்.
* கருமித்தனம் ஒருவனுடைய எல்லா நற்குணங்களையும் அழித்துவிடும் தன்மை கொண்டது.
- ஆதிசங்கரர்