
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
*நடைமுறைக்கு ஒத்துவராததை கைவிட்டு அறிவுக்கு முன்னுரிமை தர வேண்டும்.
*எப்போதும் பாடுபடு. உழைப்பதில் தான் சுகமிருக்கிறது. உழைத்தால் வறுமை, நோய்க்கு இடமிருக்காது.
*தனக்கும், பிறருக்கும் துன்பம் தருவது பாவம். தனக்கும், பிறருக்கும் இன்பம் தருவது புண்ணியம்.
*மனதால் பிறருக்கு தீங்கு நினைத்தாலும் குற்றமே. அதற்குரிய தண்டனையை அனுபவிக்க நேரிடும்.
*அன்பிருக்கும் இடத்தில் மகிழ்ச்சிக்கு குறைவு இருக்காது.
- பாரதியார்