
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* உழைக்கும் வர்க்கத்தினருக்கு வணக்கம் செலுத்துவோம். வீணாக உண்டு களித்திருக்கும் சோம்பேறிகளை நிந்தனை செய்வோம்.
* தலை உச்சியின் மீது வானமே இடிந்து விழுந்தாலும், அச்சம் கொள்ளத் தேவைஇல்லை. உள்ளத்தில் அச்சம் நீங்க வேண்டுமானால், அன்பு உணர்வை வளர்க்க வேண்டும்.
* விருப்பு வெறுப்பை வென்று விட்டவனுக்கு மட்டுமே ஞானப்பார்வை உண்டாகும். அவன், சாஸ்திரங்களைப் பிரதிபலிக்கும் கண்ணாடியாக விளங்குவான்.
* தன்னைத் தானே செம்மைப்படுத்திக் கொள்ள முயற்சிக்க வேண்டும். அதுவே மகிழ்ச்சி அடையும் வழியாகும்.
* உழைப்பவர்கள், தற்காலிக வெற்றி கிடைத்தவுடன் தடைபட்டு நின்று விடக்கூடாது. மேலும், முயற்சியுடன் உழைத்து நிலைத்த வெற்றி பெற வேண்டும்.
- பாரதியார்