ADDED : ஜூலை 31, 2014 05:07 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* தெய்வம் எப்போதும் அருளைப் பொழிகிறது. அதைப் பெற நாம் மனதைத் திறந்து வைப்போம்.
* எல்லாம் அளிக்கும் இறைவன் நம்மைக் காப்பான் என்று பூரணமாக நம்பினால், நம் துயரம் எல்லாம் அழிந்து போகும்.
* பலருக்கும் உதவும் குணம் இல்லாவிட்டால் பக்தி என்பது வேஷத்தை தவிர வேறொன்றுமில்லை.
* கொள்கை அளவில் அன்பை போற்றினால் போதாது. ஒவ்வொரு செயலிலும் அன்பு வெளிப்பட வேண்டும்.
* உலகில் ஏழைகள் செய்யும் அநியாயம் குறைவு. செல்வந்தர்களே அதிக அநீதி இழைக்கின்றனர்.
- பாரதியார்