
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* வாழ்வின் நிலையாமை பற்றி ஒரு கணம் சிந்தித்தாலே போதும். தான் என்ற ஆணவம் அழிந்து போகும்.
* நன்மை, தீமை இரண்டையும் சீர்துாக்கி செயலாற்றுபவனே கடமை வீரன்.
* அதிகார பலத்தால் தன் எண்ணத்தை செயல்படுத்துபவன் நீதிமானாக இருக்க முடியாது. அன்பு வழியில் எதையும் சாதிக்க முடியும்.
* தன்னைத் தான் வென்றவன் ஆயிரம் வீரர்களை வென்ற வீரனைக் காட்டிலும் சிறந்தவன்.
* உண்மை ஒன்றே உலகில் என்றும் நிலைத்து நிற்கும் தகுதியைப் பெற்றிருக்கிறது.
-புத்தர்