ADDED : செப் 10, 2015 03:09 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* பெண்களே சமூக கவுரவத்தின் அடையாளமாக இருக்கிறார்கள். அவர்களைப் போற்றிப் பாதுகாப்பது நம் ஒவ்வொருவரின் கடமை.
* எதிர்க்கும் ஆற்றல் இருந்தாலும், பிறர் செய்யும் பிழைகளைப் பொறுத்துக் கொள்பவனே நல்ல மனிதன்.
* விரோத மனப்பான்மை இல்லாதவன் எதை செய்தாலும் அது தடையின்றி முழுமையாக நிறைவேறும்.
* பிறருக்குப் போதனை செய்வதை விட, தன்னைப் பண்படுத்திக் கொள்ள முயல்வதே நற்பண்பின் அடையாளம்.
புத்தர்