/
ஆன்மிகம்
/
ஆன்மிக சிந்தனைகள்
/
காஞ்சி பெரியவர்
/
சிறிது நன்மையாவது செய்!
/
சிறிது நன்மையாவது செய்!
ADDED : செப் 29, 2013 04:09 PM

* பலனை எதிர்பார்க்காமல் உங்களால் முடிந்த நல்லதைச் செய்து கொண்டிருங்கள். பலன் கொடுக்க வேண்டியது கடவுளின் வேலை.
*
நம்முடைய துன்பத்தை மலை போல நாம் பெரிதாக எண்ணிக் கொண்டிருப்பது கூடாது.
நம்மால் உலகம் சிறிது நன்மை பெறும் என்று தெரிந்தாலும் கூட, அதற்காக நாம்
கடுமையாகப் பாடுபட வேண்டும்.
* கருணையில் கடவுள் கடலுக்குச் சமமானவர். நதிகளைப் போல தன்னை நாடி வரும் பக்தர்களை ஏற்றுக் கொண்டு அவர் அருள்புரிகிறார்.
*
புத்திக்குத் தெரிந்தும் ஒரு தவறைச் செய்யும்போது அது பாவமாகிறது. புத்தி
தங்கள் வசத்தில் இல்லாமல் இருப்பவர்கள் செய்யும் எந்தச் செயலும் பாவமாகாது.
* இயற்கையில் எல்லாம் மாறிக் கொண்டே தான் இருக்கிறது. சில மாறுதல்கள்
மட்டும் நம் கண்ணுக்குத் தெரிகிறது. மலையும் சமுத்திரமும் கூட
காலச்சக்கரத்தில் மாறுதல் அடைகின்றன.
- காஞ்சிப்பெரியவர்