/
ஆன்மிகம்
/
ஆன்மிக சிந்தனைகள்
/
காஞ்சி பெரியவர்
/
மனதை அன்புமயமாக்குங்கள்!
/
மனதை அன்புமயமாக்குங்கள்!
ADDED : மே 10, 2015 03:05 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* மனதைக் கட்டுப்படுத்தினால், நல்ல விஷயத்தில் கவனம் செலுத்த முடியும்.
* எந்த உயிருக்கும் கெடுதல் எண்ணாமல், மனதை அன்புமயமாக்கி விடுங்கள்.
* தினமும் பத்து நிமிடமாவது கடவுளைப் பிரார்த்தனை செய்வது அவசியம்.
* பிறரிடம் உள்ள நல்ல அம்சங்களை பாராட்டுங்கள். அவர்களை உற்சாகமுடன் செயல்படத் தூண்டுங்கள்.
* தகுதி இருந்தால் மட்டுமே அறிவுரை கூறுங்கள். இல்லாவிட்டால் மவுனத்தைக் கடைபிடியுங்கள்.
* கொடிய பாவியும் மனம் திருந்தி நல்வழிக்குத் திரும்ப வேண்டும் என கடவுளிடம் வேண்டுங்கள்.
-காஞ்சிப்பெரியவர்