ADDED : ஆக 30, 2013 03:08 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* எதைச் செய்வது நல்லது என்று தோன்றுகிறதோ அது புண்ணியம். எதைச் செய்யக்கூடாது என்று தோன்றுகிறதோ அது பாவம்.
* உலகில் பிறந்த அனைவரும் புண்ணியம் செய்ய வேண்டும் என நினைக்கிறார்கள். ஆனால், நூற்றுக்கு எண்பது பங்கு பாவத்தையே செய்கிறார்கள்.
* வாயாலும், மனத்தாலும், உடலாலும், பணத்தாலும் நாம் பலவித பாவங்களை அன்றாடம் செய்து கொண்டே இருக்கிறோம்.
* கயிற்றை எப்படி சுற்றினோமோ, அப்படியே தான் அவிழ்க்க வேண்டும். அதுபோல, பாவச்செயல்களின் பலனைக் கழிக்க, புண்ணிய செயல்களில் ஈடுபடுவதே வழி.
* மனம்,வாக்கு, உடல், பணம் என எல்லாவற்றாலும் நற்செயல்களில் ஈடுபட்டு புண்ணியத்தை தேடிக் கொள்ள முயல வேண்டும்.
- காஞ்சிப்பெரியவர்