sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

கிருபானந்த வாரியார்

/

மனமிருப்பவன் என்ன செய்வான்?

/

மனமிருப்பவன் என்ன செய்வான்?

மனமிருப்பவன் என்ன செய்வான்?

மனமிருப்பவன் என்ன செய்வான்?


ADDED : ஆக 21, 2011 09:08 AM

Google News

ADDED : ஆக 21, 2011 09:08 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* ஞானத்தைக் கொடுப்பவர் குருவைத் தவிர வேறு யாருமில்லை. நம் வாழ்க்கையில் சிறந்த ஒரு ஆசிரியர் கிடைத்துவிட்டால் நிச்சயம் பிறவிக்கடலைத் தாண்டிவிடலாம்.

* நாம் பிறவாத இடமோ, பேசாத மொழியோ, தோன்றாத குலமோ கிடையாது. எனவே எல்லா நாடும் நமது நாடே, எல்லா மக்களும் நமது சகோதரர் என்று கருதி சாந்தமாகவும், அன்பாகவும் வாழ வேண்டும்.

* கிரகம் என்றால் வீடு அல்லது இருப்பிடம். 'வி' என்றால் மேன்மை. மேன்மையான இருப்பிடம் விக்ரகம். இறைவனது திருவருள் சிறப்பாக விளங்கி தோன்றும் உயர்ந்த இடம் விக்ரகம்.

* விலங்குகளிலிருந்து மனிதன் உயர்ந்து காட்சி அளிப்பது தெய்வ உணர்ச்சி ஒன்றினால் தான். 'மனித வாழ்க்கைக்கு கடவுள் வணக்கம் தேவையா? நாங்கள் கடவுளை வணங்காமல் வாழவில்லையா?' என்று சிலர் கேட்கிறார்கள். மானம் உள்ளவன் ஆடை உடுப்பான், மனம் உள்ளவன் இறைவனை வணங்குவான்.

- வாரியார்



Trending





      Dinamalar
      Follow us