
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* நன்மை தரும் உண்மையை எப்போதும் பேசுங்கள். விரும்பியது கிடைக்காவிட்டால் மனம் தளர்ந்து விடாதீர்கள்.
* தன்னைப் போலவே மற்றவர்களையும் நேசியுங்கள். எல்லா உயிர்கள் மீதும் இரக்கம் காட்டுங்கள்.
* சந்தேகம் கொண்ட மனிதனுக்கு வாழ்வில் எப்போதும் நிம்மதி கிடைக்காது.
* கோபம், பிடிவாதம், பொறாமை, நன்றியின்மை போன்ற தீய குணங்கள் கொண்ட மனிதனை அழிவுப்பாதையில் தள்ளிவிடும்.
* துறவியாக இருந்தாலும், இல்லறத்தில் இருந்தாலும் மனிதனுக்கு நல்லொழுக்கம் மிகவும் அவசியமானது.
* நோயாளிக்குச் சேவை செய்வதில் சிறிதும் வருத்தம் கூடாது. பிறர் நன்மைக்காக பாடுபடுபவன் தனக்கும் நன்மையைத் தேடிக் கொள்கிறான்.
* எப்போதும் நல்லவர்களோடு சேர்ந்திருப்பதில் மகிழ்ச்சி கொள்ளுங்கள்.
- மகாவீரர்