ADDED : ஜூலை 31, 2013 12:07 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* ஒருவன் நாள் ஒன்றுக்கு இருமுறையாவது பாவமன்னிப்பு கேட்கவில்லையானால் அவன் தன்னுடைய ஆத்மாவுக்கு தீமை இழைத்து விட்டான்.
* இவ்வுலக வாழ்வில் மதிமயங்காமல் வாழு. அல்லாஹ் உன்னை நேசிப்பான்.
* யார் சொன்ன வாக்குப்படி நடக்கவில்லையோ அவன் உண்மை முஸ்லிம் அல்ல.
* கெட்ட கூட்டத்தாருடன் இருப்பதை விட தனிமையாக இருப்பதே மேல். தனிமையாக இருப்பதை விட நல்ல கூட்டத்தாருடன் இருப்பதே மேல்.
* நீங்கள் எவர்களுடன் சேர்ந்து வாழுகின்றீர்களோ அவர்களுடனே நாளை மறுமையிலும் சேர்ந்து இருப்பீர்கள்.
* உங்களுடைய இதயத்தை சூழ்ச்சி, பொறாமை என்ற இரு விஷயங்களைவிட்டு பாதுகாத்துக் கொள்ளுங்கள்.
* மனிதர்களைப் பார்த்து வெட்கப்படுவதை விட அல்லாஹ்வுக்கு வெட்கப்படுவதே உயர்வானதாகும்.
- நபிகள் நாயகம்