ADDED : பிப் 09, 2024 11:02 AM

* லைலத்துல் கத்ர் இரவில் ஈமானுடனும், நன்மையை நாடியும் நின்று எவர் வணங்குவாரோ அவரது பாவங்கள் மன்னிக்கப்படும்.
* குர்ஆனை ஓதியவருக்கு மறுமை நாளில் அது சிபாரிசு செய்யக்கூடியதாக இருக்கும்.
* இருள் சூழ்ந்த நேரத்தில் கூட இறை இல்லம் நோக்கி நடந்து செல்பவர்களுக்கு மறுமைநாளில் நிறைவான ஒளி கிடைக்கும்.
* மறுமைநாளில் தொழுகையைப் பற்றித் தான் முதல் கேள்வி கேட்கப்படும். அது சரியாக இருந்தால் அவர் வெற்றி பெற்றவராகி விடுவார்.
* இறைவன் ஒளிமயமானவன். அவனைப் பார்க்க இயலாது.
* இடதுகைக்கு கூட தெரியாமல் தர்மம் செய்பவருக்கு மறுமை நாளில் இறைவன் இனிய நிழலை வழங்குவான்.
* பொய்ச் சத்தியம் செய்வோரையும், செய்த தர்மத்தை தம்பட்டம் அடிப்போரையும் அவன் வெறுக்கிறான்.
* கோபமுற்ற போது நின்று கொண்டிருந்தால் நீங்கள் அமர்ந்து கொள்ளுங்கள். கோபம் போகாவிடில் படுத்து விடுங்கள்.
* மனிதர்கள் மரணத்தை நெருங்கவிடாமல் ஓடுகிறார்கள். ஆனால் அது அவர்களை நோக்கி விரைந்து கொண்டிருக்கிறது.
* உடலை விட்டு உயிர் பிரியும்போது இவ்வுலகக் கண் மூடி மறுமையில் கண் திறந்துவிடும்.