ADDED : மார் 20, 2016 10:03 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* விருப்பு, வெறுப்பு இரண்டையுமே வாழ்வில் தவிர்த்து விடுங்கள். எதிலும் நடுவுநிலைமையுடன் செயல்படுங்கள்.
* பக்தி இல்லாமல் மேலோட்டமாக கடவுளின் திருநாமத்தை ஜெபிப்பது கூடாது. அர்ப்பணிப்பு உணர்வுடன் பக்தியில் ஈடுபட வேண்டும்.
* பிறருக்கு கொடுப்பதெல்லாம் மனிதன் தனக்கே கொடுத்துக் கொள்கிறான். ஆனால் அந்த உண்மையை யாரும் அறிவதில்லை.
* 'நான் யார்' என்ற கேள்வியைக் கேட்டுக் கொண்டே சென்றால் தான், உன்னைப் பற்றிய உண்மை உனக்கு புலப்படும்.
-ரமணர்