ADDED : ஜூன் 12, 2016 03:06 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* பொறுப்பு அனைத்தையும் கடவுளிடம் ஒப்படைத்து அவரின் திருவடியைச் சரணடையுங்கள். வாழ்வில் எல்லாம் ஒழுங்காக நடக்கும்.
* கடவுளை யாரும் ஏமாற்ற முடியாது. ஆணவம் என்பதே இல்லாத மனத்துாய்மை ஒன்றையே அவர் விரும்புகிறார்.
* எண்ணம், சொல், செயல் மூன்றாலும் கடவுளைச் சிந்தித்திருப்பவனின் வாழ்வில் சுமை என்பது சிறிதும் இருக்காது.
* நல்லவர்களின் நட்பைத் தேடிச் செல்லுங்கள். இதனால் மனதிலுள்ள அறியாமை நீங்கி விடும்.
- ரமணர்