
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* நாம் கடவுளின் கையில் இருக்கும் சிறு கருவி என்பதை உணருங்கள். இதை உணர்ந்து விட்டால் மனதை விட்டு ஆணவம் வெளியேறி விடும்.
* மனம் ஓரிடத்தில் நிற்காமல் உழன்று கொண்டேயிருக்கும். தியானத்தின் மூலம் இதனை வசப்படுத்த முடியும்.
* நல்ல மனம், கெட்ட மனம் என்று இரண்டு மனம் இல்லை. மனதிலே இந்த இரு பண்பும் உள்ளன.
* நான் பலமற்றவன் என்றோ, தீயவன் என்றோ நினைப்பது கூடாது. எல்லா மனிதர்களும் தெய்வீக தன்மை கொண்டவர்களே.
- ரமணர்