ADDED : பிப் 10, 2014 02:02 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* எல்லாச் செயலையும் நாமே செய்கிறோம் என நினைப்பது அகந்தையின் அடையாளம்.
* நாம் கடவுளின் ஒரு சிறு கருவி மட்டுமே. இதை உணர்ந்தால் கர்வம் மறையும்.
* பிறர் கெட்டவர்களாக இருந்தாலும், அவர்கள் மீதும் விருப்பம் கொள்.
* உலக விஷயங்களிலும், பிறரின் அந்தரங்க விஷயங்களிலும் மனதை அலைபாய விடக்கூடாது.
* நான் யார் என்ற கேள்வியைக் கேட்டுக்கொள். பதிலைத் தேடிச் செல். வழி உனக்கு புலப்படும்.
* ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் தெய்வீகத் தன்மையும், வலிமையும் குடி கொண்டிருக்கிறது.
-ரமணர்