
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* உண்மையில், நாம் அனைவரும் கடவுளின் சிறுகருவியே. இந்த எண்ணத்துடன் கடமையாற்றினால் ஆணவத்திற்கு இடமிருக்காது.
* உயிர்கள் அனைத்தும் அருளின் வடிவங்களே. அருளின் உச்சவடிவம் மவுனமே. அதுவே உயர்ந்த உபதேசமும் கூட.
* பிரார்த்தனை என்பது வெறும் சொற்கள் அன்று. அது இதயத்திலிருந்து புறப்பட்டு, இதயத்திற்குள்ளேயே கலந்து விட வேண்டும்.
* அகந்தை கொண்ட மனிதர்கள் எல்லாச் செயல்களையும் நாமே செய்கிறோம் என்று தவறான எண்ணத்துடன் வாழ்கிறார்கள்.
* 'நான் யார்' என்ற கேள்வியை உன்னிடம் நீயே கேட்டு கொள். பதிலைத் தேடிப் புறப்பட்டுச் செல். வழி புலப்படத் தொடங்கும்.
* உலகில் யாரும் பலமற்றவரோ, கெட்டவரோ கிடையாது. இப்படி நினைப்பது தான் பெரிய தவறு.
- ரமணர்