ADDED : செப் 29, 2013 04:09 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* ஒவ்வொரு மனிதனும் வலிமையும், தெய்வீகத்தன்மையும் கொண்டவனே.
* உடையில் மாற்றம் செய்வது மட்டும் சந்நியாசம் ஆகாது. மனதிலுள்ள ஆசாபாசத்தை துறப்பதே உண்மையான துறவு.
* நீ ஒருவரைத் திட்டினால் அது உன்னையே ஒருநாள் வந்தடையும். நீ ஒருவருக்குக் கொடுத்தால் அது உனக்கே கொடுத்துக் கொண்டதாகும். ஏனென்றால் நீ வேறு, பிறர் வேறு அல்ல.
* உள்ளத்தை தூய்மையாக வைத்துக் கொள்வதையே பணிவு என்கிறோம். தூய்மையில்லாதவன் செய்யும் வணக்கம் ஒரு ஏமாற்றுவேலையே.
* குழப்பில்லாத மனமே அமைதியின் பிறப்பிடம். அமைதியில் தான் ஆனந்தம் இருக்கிறது.
* வாழ்வுக்கு கடவுளே பொறுப்பானவர் என்ற நம்பிக்கையோடு முழுமையாக நம்மை அர்ப்பணிப்பதே சரணாகதி.
- ரமணர்