
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
*மன அடக்கம் எளிதில் உண்டாகாது. பொறுமையே வெற்றிக்கு அடிப்படை.
*பக்தி முதிர்ச்சி அடைந்து விட்டால், குறை என்று சொல்லி, கடவுளிடம் முறையிட எதுவும் இருக்காது.
*எல்லா இடங்களிலும் செயல்களிலும் தெய்வீகமே பரவி இருக்கிறது. அதன் சக்தியை உணர, மனிதன் முயல வேண்டும்.
*கடவுளை முழுமையாக நம்புபவன் தான், அவரை சரணாகதி அடைய தகுதியானவன்.
*பக்தியின் உயர்ந்த வடிவம் மவுனம். அதை விட சிறந்த உபதேசம் வேறில்லை.
- ரமணர்