
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* காணும் உயிரை எல்லாம் சிவமாக கருது. கடைசியில் சிவமாக மாறி விடுவாய்.
* பணம் இல்லாமையே வறுமை என்றனர். உண்மையில் கடவுளைப் பற்றி அறியாமல் இருப்பதே கொடிய வறுமை.
* நோய்க்கு இடம் கொடுக்காதே. நோய் உள்ளவனால் கடவுளை வழிபட முடியாது.
* தூய்மையைத் தேடி அலைய வேண்டாம். மனதை துாய்மையாக்கி விட்டால் உலகமே திருந்தி விடும்.
* கனவிலும் கடவுளை மறக்காதே. மறந்தால், உயிரற்ற ஜடப் பொருளாகி விடுவாய்.
* ஐம்புலன்களில் நாவை முதலில் அடக்கி விட்டால் மற்றவை தானே அடங்கி விடும்.
-சாந்தானந்தர்