
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* பிறருக்குப் பயப்படுவதும், பிறரைப் பயமுறுத்துவதும் மிருகத்தின் செயல். மன உறுதியும், அனைவரிடமும் அன்பு காட்டுவதும் தான் மனிதப்பண்பு.
* நல்ல உணவால் உடல் ஆரோக்கியம் பெறுகிறது. அது போல, நல்ல உணர்வுகளால் உள்ளம் ஆரோக்கியம் பெறுகிறது.
* நாம் நல்லவர்களாக இருப்பதோடு, நாம் பழகுகின்ற நண்பர்களும் நல்லவர்களாக இருப்பது அவசியம்.
* நேர்மை, ஒழுக்கம் இவற்றைப் புறக்கணிப்பதால் வாழ்க்கையில் வசதிவாய்ப்பு பெருகலாம். ஆனால் மனநிம்மதியை இழக்க நேரிடும்.
- சாய்பாபா