ADDED : செப் 29, 2013 04:09 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* என்னால் எல்லாம் முடியும் என்று அகந்தையோடு இருந்தால் கடவுள் அருள் கிடைப்பதில்லை. 'எல்லாம் உன் செயலே' என்று சரணடைந்து விட்டால் கடவுள் நம்மை நோக்கி ஓடோடி வந்து விடுவார்.
* இயற்கை அளிக்கும் வளத்தை அளவோடு ஏற்று அனுபவியுங்கள். இயற்கையும் இறைவனும் ஒன்றே. இயற்கையை பாழ்படுத்துவது பெரும்பாவம்.
* தர்மத்தை நீ காப்பாற்றினால் தர்மம் உன்னைக் காக்கும். ஒவ்வொரு மனிதனும் தர்மவழியில் வாழத் தொடங்கினால், உலகமே நற்கதி அடைந்து விடும்.
* நம்முடைய விழிப்புணர்வே மனசாட்சி. அதைப் பின்பற்றி வாழ்பவன் தெய்வநிலைக்கு உயர்கிறான்.
* நல்ல எண்ணத்தை மனதில் வளருங்கள். நல்ல வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்துப் பேசுங்கள். நல்ல செயல்களில் ஈடுபடுங்கள். இதைவிட சிறந்த வழிபாடு ஏதுமில்லை.
- சாய்பாபா