sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 27, 2025 ,புரட்டாசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

சத்யசாய்

/

எதிர்விளைவு பற்றி கவலை வேண்டாம்

/

எதிர்விளைவு பற்றி கவலை வேண்டாம்

எதிர்விளைவு பற்றி கவலை வேண்டாம்

எதிர்விளைவு பற்றி கவலை வேண்டாம்


ADDED : டிச 11, 2007 09:26 PM

Google News

ADDED : டிச 11, 2007 09:26 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* நமது தீய எண்ணங்கள், தீய குணங்கள் இவற்றை வெளிவிடுதலே ரேசகம் (வெளிமூச்சு) ஆகும். நல்ல புனிதமான, தெய்வீக உணர்வுகளை உள் நிரப்பிக் கொள்ளுதலே (பூரகம்) ஆகும். அத்தகைய நல்லுணர்வுகளை மனதில் இருத்தி வைத்துக் கொள்ளுதலே கும்பகம் ஆகும். இதுவே ரேசகம், பூரகம், கும்பகம் ஆகியவற்றின் உட்பொருள் ஆகும்.

* இந்த உட்பொருள் எனக்குத் தேவையில்லை என்று நினைத்தால் வேறொன்று இருக்கிறது. 'ஸோ' என்ற ஒலியுடன் மூச்சை உள்ளிழுக்கிறோம். 'ஹம்' என்ற ஒலியுடன் வெளிவிடுகிறோம். எல்லோரும் இதைச் செய்கிறார்கள். விசேடமாக நீங்கள் செய்வதென்ன?

'ஸோஹம்' என்ற ஒலியில் தெய்வீகக் கோட்பாடு இருக்கிறது. 'ஸோ' என்றால் அது (தத்) கடவுள். 'ஹம்' என்பது நான். அதாவது, 'கடவுள் நானே', 'கடவுள் நானே' என்று கூறிக்கொள்கிறோம். ஒவ்வொரு நாளும் 21 ஆயிரத்து600 தடவைகள் 'நானே கடவுள்' என்ற மந்திரத்தை சொல்லிக்கொண்டே இருக்கிறோம்.

* மனிதப்பிறப்பு கர்மாவினால் இயங்குகிறது. தார்மீகமான செயல்களுக்காகவே இந்த உடல் நமக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. ஆகையால், நாம் செயல்படுத்துவதற்காகப் பிறந்திருக்கிறோம். நமக்கு இடப்பட்டிருக்கும் கடமையை ஒழுங்காகச் செய்தால் மனித சமுதாயம் நம்மைப் போற்றும். புகழும் வாழ்ந்த வாழ்வின் அடையாளம் காட்டும்.

* எந்தக் காரியத்திலும், அதன் பலன்களை எதிர்பார்த்தோ, எடைபோட்டோ, எதிர் விளைவுகள் என்ன என்றோ நினைத்து ஈடுபடாதீர்கள். அன்புடன் அழைத்தால், அன்புடன் மறுமொழி கிடைக்கும். அன்புதான் கடவுள். அன்பிலேயே வாழுங்கள்.



Trending





      Dinamalar
      Follow us