ADDED : ஆக 08, 2013 03:08 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* கடவுள் ஒருவர் இருக்கின்றார் என்ற நம்பிக்கையுடன் வாழுங்கள். இதனால் நம் வாழ்வு உறுதி பெறுவதோடு, செயல்களைச் சிறப்பாகச் செய்ய முடியும்.
* எப்போதும் இனிமையான நல்ல விஷயங்களைப் பேசுங்கள். நல்லவர்களை நாடிச் சென்று அவர்களின் நல்லுரைகளைக் கேளுங்கள்.
* இறைவன் இயற்கையின் வடிவமாகத் திகழ்கிறான். இயற்கையைப் பாதுகாத்தால் இறைவனை வழிபட்ட புண்ணியம் கிடைக்கும்.
* பேராசை, கர்வம், பொறாமை, கோபம் போன்ற தீய குணங்களைத் தூக்கி எறியுங்கள். எல்லா உயிர்களையும் நேசிக்கக் கற்றுக் கொள்ளுங்கள்.
* சுயநலமில்லாதவர்களாக வாழுங்கள். உள்ளத்தூய்மையுடன் பிறருக்குச் சேவை செய்யுங்கள்.
* பிறருக்குச் சேவை செய்யும்போது 'நான் எஜமானன்' என்ற எண்ணம் சிறிதும் கூடாது.
- சாய்பாபா