
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* தனக்கென ஒரு பழத்தைக் கூட மரம் வைத்துக் கொள்வதில்லை. அது போல பிறருக்கு கொடுத்து உதவுவதில் மகிழ்ச்சி கொள்ளுங்கள்.
* பொருள் இல்லாதவனை உலகம் ஏழை என்று சொல்கிறது. அதிக ஆசையுள்ளவனே உண்மையில் ஏழை.
* குறிப்பிட்ட காலம் தான் உலகில் வாழப் போகிறோம். அதற்குள் நாலு பேருக்காவது நன்மை செய்து விட வேண்டும்.
* மனம் ஒரு தாவரம். அதைக் கட்டுப்பாடு என்னும் வேலியிட்டுக் காவல் புரிய வேண்டும்.
- சாய்பாபா