ADDED : ஜூன் 21, 2017 04:06 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* பொறுமையே சிறந்த தவம். திருப்தியே மேலான மகிழ்ச்சி. கடவுளின் திருநாமத்தைச் சொல்வதே பேரின்பம்.
* கடவுளிடம் அன்பு செலுத்துவது உண்மை என்றால், நீங்கள் எல்லா உயிர்களையும் ஆழமாக நேசிக்கிறீர்கள் என்று பொருள்.
* கன்று வளரும் போதே அதன் கொம்பும் வளர்வது போல செல்வம் வளரும் போதே செருக்கும் வளர்ந்து விடுகிறது.
* காரணம் இன்றி கடவுள் எதையும் படைக்கவில்லை. உலகிலுள்ள ஒவ்வொன்றிற்கும் ஏதோ ஒரு அர்த்தம் இருக்கிறது.
* பகலும் இரவும் போல இன்பமும் துன்பமும் ஒன்றுக்குப் பின் ஒன்றாக வந்தே தீரும்.
சாய்பாபா