ADDED : மார் 02, 2016 07:03 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* குழந்தைகளையும், பெண்களையும் அன்புடன் நடத்துங்கள். அவர்களை அழ வைத்து பாவத்திற்கு ஆளாகாதீர்கள்.
* துன்பத்தில் வருந்துவோருக்கும், பணம் இல்லாத ஏழைகளுக்கும் உதவுவது உங்களின் கடமையாகட்டும்.
* அறிவால் யாரும் கடவுளை அடைந்ததில்லை. அவர் ஆராய்ச்சிக்கு அப்பாற்பட்டவராக இருக்கிறார்.
* ஒருவர் உங்களை நிந்தித்தால் அந்த இடத்தை விட்டு விலகிச் செல்லுங்கள்.
* ஆடம்பர ஆடைகளை அணியாதீர்கள். உணவிலும், உடையிலும் எளிமையைப் பின்பற்றுங்கள்.
-ஷீரடி பாபா