
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* எப்போதும் அமைதியாக இருங்கள். பேசாமல் இருந்தால் பிரச்னை வராது.
*கடவுள் ஒருவரால் மட்டுமே உங்களுக்கு உதவ முடியும். அவர் மீது பக்தி செலுத்துவதே உண்மையான மகிழ்ச்சி.
* ஒழுக்கம் என்பது வளர்ச்சிக்கான வழிமுறை. அது உங்கள் சுயவிருப்பத்தில் இருந்து முற்றிலும் மாறுபட்டது.
* பிறருக்கு புத்திமதி கூறும் முன் உங்களுக்கு அத்தகுதி இருக்கிறதா என்று ஒருமுறை யோசித்துப் பாருங்கள்.
* நீங்கள் செய்யும் வேலையை கடவுளுக்குச் செலுத்தும் பிரார்த்தனையாக கருதி ஈடுபாட்டுடன் செய்யுங்கள்.
-ஸ்ரீஅன்னை