
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* நேற்றைய பொழுது முடிந்து விட்டது. இனி எப்படி இருக்க விரும்புகிறாய் என்பதை மட்டும் சிந்தித்துப் பார்.
* இன்றைய பொழுதை நல்ல வாய்ப்பாகப் பயன்படுத்துவது உன் கையில் தான் இருக்கிறது.
* அன்பும், அமைதியும் உன்னிடம் இருந்தால் மட்டுமே பிறருக்கு சேவை செய்வது எளிது.
* பிரச்னைகளைச் சரியாக புரிந்து கொள்ளாததே துன்பத்திற்கு காரணமாக இருக்கிறது.
* மனிதர்கள் ஏமாற்றலாம். ஆனால், கடவுளை நம்புபவர்களுக்கு ஏமாற்றத்திற்கு இடமேயில்லை.
- ஸ்ரீஅன்னை