ADDED : ஆக 29, 2016 01:08 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* வாழ்க்கைக்கு தன்னம்பிக்கை முக்கியம். நம்பிக்கை கொண்டவன் ஆபத்தான நேரத்திலும் அமைதியைக் கடைபிடிப்பான்.
* கடமையில் விழிப்புடன் செயலாற்று. பலனைக் கடவுளின் பொறுப்பில் விட்டு விடு. எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பாய்.
* எவ்வளவு குறைவாகப் பேச முடியுமோ அவ்வளவு குறைவாகப் பேசு. இல்லாவிட்டால் மவுனமாக இருக்கப் பழகு.
* எல்லா உயிர்களின் மீதும் அன்பு செலுத்துவதே உண்மையான வழிபாடு.
- ஸ்ரீஅன்னை