
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* தைரியம் கொண்டவனுக்கே வெற்றி சொந்தமானது. கேட்டை விளைவிக்கும் அச்சத்தை அகற்றி விடு.
* கடந்த காலத்தை மறந்திடு. உள்ளத்தில் உறுதியுடன் நிகழ்காலத்தில் கடமை செய்.
* உனது தோல்விக்காக யார் மீதும் ஆத்திரப்படாதே. நீ செய்வதைத் திருந்தச் செய்.
* தற்பெருமை சிறிதும் வேண்டாம். ஆணவம் இருக்கும் வரை ஆண்டவனை நெருங்க முடியாது.
* மனதிற்குப் போதுமான வேலை கொடுக்காவிட்டால், அது சஞ்சலப்படத் தொடங்கும்.
* நல்ல நூல்களைத் தேர்ந்தெடுத்து, தினமும் சிறிது நேரமாவது படிக்க முயற்சி செய்.
-ஸ்ரீஅன்னை