
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* சுதந்திரம் தான் வளர்ச்சியின் ஆணிவேர். சுதந்திரம் இல்லாத எதுவும் வளர்ச்சி பெற முடியாது.
* மனித இதயத்தின் அடிஆழத்தில் கடவுள் ஒளிந்து கொண்டிருக்கிறார். அவரை உணர்ந்தவனே உண்மையை உணர்ந்தவன்.
* கோபம் மனிதனை முன்னேற விடாமல் தடுக்கிறது. அமைதியுடன் நிலைகுலையாத மனம் படைத்தவனே பணியில் சிறக்க முடியும்.
* மற்றவரைக் குறை கூறுவது மனித இயல்பு. நம் கண்களை நாம் பார்க்க முடியாதது போல நம் தவறுகளை நாம் உணர்வதில்லை.
* பெற்றுக் கொள்வதில் பெருமை என்ன இருக்கிறது? கொடுப்பவனே வாழ்வில் பேறு பெற்றவன் ஆவான்.
* தன்னலத்தை ஒழிப்பதில் தான் உண்மையான மகிழ்ச்சி இருக்கிறது.
* நம் எல்லோருக்கும் ஒரே மாதிரியான இன்பம் அளிக்கும் பொருள் உலகத்தில் இல்லவே இல்லை.
- விவேகானந்தர்