sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

விவேகானந்தர்

/

மனதில் உறுதியுடன் போராடு

/

மனதில் உறுதியுடன் போராடு

மனதில் உறுதியுடன் போராடு

மனதில் உறுதியுடன் போராடு


ADDED : ஏப் 10, 2011 02:04 PM

Google News

ADDED : ஏப் 10, 2011 02:04 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* சொல்லால் விளக்க முடியாத மேம்பட்ட அன்பின் சாரமாக இறைவன் இருக்கிறான். அவனை நாம் உணர முடியுமே தவிர, அவனது அன்பின் தன்மையை யாராலும் விளக்கமுடியாது.

* இறைவன் ஒருவனே கொடுப்பவன். அவன் தரும் காசோலையைப் பெற்றுக் கொள்ளுங்கள். அதனை பணமாக்கிக் கொள்ளலாம்.

* நன்மை, உண்மைக்கு மிக அருகில் இருக்கிறது, ஆனாலும், அது இன்னும் உண்மையின் இடத்தை அடையவில்லை.

* மனிதர்கள் தீமையைக் கண்டு மனம் கலங்கக்கூடாது. உள்ள உறுதியுடன் எதிர்த்துப் போராடவேண்டும்.

அதேபோல, நன்மை கிடைத்துவிட்டதே என தலைகால் புரியாமல் ஆடவும்கூடாது. அமைதியாக இருக்கக் கற்றுக் கொள்ள வேண்டும்.

* உயிர்களில் உயர்ந்தவன் மனிதன். உலகங்களில் உயர்ந்தது மண்ணுலகம். மனிதனைவிட உயர்ந்த ஒரு கடவுளை நம்மால் கற்பனை செய்ய முடியாது. எனவே நமது கடவுள் மனிதனே.

* இறைவனின் திருநாமத்தை திரும்பத் திரும்ப சொல்வதே ஜபம். ஜபம் செய்வதன் மூலம் இறைவனின் எல்லையற்ற அருளை பக்தனால் அடையமுடியும்.

- விவேகானந்தர்



Trending





      Dinamalar
      Follow us