ADDED : டிச 20, 2016 02:12 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* போராட்டம் இல்லாத வாழ்வில் சுவை இருப்பதில்லை. தடைகளைத் தகர்த்து வெற்றி பெறுவதில் தான் பெருமை இருக்கிறது.
* பிற பொருட்களைக் காணும் கண்கள் தன்னைக் காண்பதில்லை. பிறரைக் குறை சொல்பவன் தன் குறையை உணர்வதில்லை.
* தவறுகளைப் பெரும்பேறாகக் கருதுங்கள். அவை நமக்கு வழிகாட்டும் தெய்வங்களாக உள்ளன.
* பெற்றுக் கொள்வதில் சிறப்புக்கு இடமில்லை. பிறருக்கு கொடுத்து மகிழ்பவனே பாக்கியசாலி.
- விவேகானந்தர்