
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* சுதந்திரமானவனாக இரு. யாரிடமும் எதையும் எதிர்பார்த்துக் காத்திருக்காதே.
* ஒரு கருத்தை எடுத்துக் கொண்டு அதையே உன் வாழ்க்கை மயமாக்கு. உடலின் நாடிநரம்பெல்லாம் அந்த கருத்தே நிறைந்திருக்கட்டும்.
* நம்பிக்கை ஒருபோதும் இழந்து விடாதே. நீ அடைய வேண்டிய லட்சியத்தை நோக்கி முன்னேறு.
* எல்லாவிதமான அறிவும் ஆற்றலும் உனக்குள்ளே குடி கொண்டிருக்கிறது என்பதை மறந்து விடாதே.
* உண்மையில் பிடிப்புடன் இருந்து வா. மெதுவாகவே என்றாலும் நிச்சயம் உனக்கே வெற்றி கிடைக்கும்.
- விவேகானந்தர்