
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* எல்லோருக்கும் ஒரே மாதிரியான இன்பம் அளிக்கும் பொருள் உலகத்தில் இருப்பதாக தெரியவில்லை.
* தவறுகள் வழிகாட்டும் தெய்வங்கள். அவையே உங்களைச் சீர்திருத்தி வாழ்வை மேம்படுத்த உதவுகின்றன.
* பெற்றுக் கொள்வதில் பெருமை இல்லை. கொடுப்பவனே வாழ்வில் பேறு பெற்றவன்.
* மன ஒருமையுடன் பணி செய்பவர்கள் என்றென்றும் அழியாத சிறப்பை பெறுகிறார்கள்.
* எதற்காகவும் அழாதீர்கள். அழுகை பலவீனத்தின் அறிகுறி. அடிமைத்தனத்தின் அடையாளம்.
-விவேகானந்தர்