/
ஆன்மிகம்
/
ஆன்மிக சிந்தனைகள்
/
விவேகானந்தர்
/
வலிமை குறித்து சிந்தியுங்கள்
/
வலிமை குறித்து சிந்தியுங்கள்
ADDED : பிப் 02, 2012 10:02 AM

* உற்சாகத்துடன் கடமைகளைச் செய். ஆன்மிக வாழ்க்கை வாழ்வதற்கான முதல் அறிகுறியே உற்சாகமாக இருப்பது தான்.
* அறிவுச்சுரங்கத்தை திறப்பதற்கான திறவுகோல் மன ஒருமைப்பாடு மட்டுமே. மன ஒருமையால் இயற்கையைக் கூட நம்மால் வெல்ல முடியும்.
* கடவுளின் குழந்தைகளான நீங்கள் வலிமை உடையவர் என்று நினைத்தால் வலிமை படைத்தவர் ஆவீர்கள்.
* பலவீனத்திற்கான பரிகாரம் பலவீனத்தைக் குறித்து ஓயாது சிந்திப்பதல்ல, மாறாக வலிமையைக் குறித்து சிந்திப்பது தான்.
* மனிதனிடம் மறைந்திருக்கும் பரிபூரணத்தன்மையை வெளிப்படுத்துவது கல்வி. முதலில் கீழ்ப்படிய கற்றுக் கொண்டால் கட்டளையிடும் பதவியை தானாகப் பெற்று மகிழ்வீர்கள்.
* அனைத்து தேவைகளை நிறைவேற்றவும், அனைத்து துன்பங்களையும் நீக்கும் பேராற்றல் ஒவ்வொருவருக்கும் இருக்கிறது என்பதை உணருங்கள்.
- விவேகானந்தர்