ADDED : மே 04, 2016 03:05 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* கடவுளால் தான் கோவிலுக்கு மகிமை உண்டாகிறது. கோவிலால் கடவுளுக்கு பெருமை உண்டாவதில்லை.
* அறிவு, அறியாமை இரண்டையும் கடந்தால் ஒழிய கடவுளை அறிய முடியாது.
* மனதில் எப்போதும் போராட்டம் நடக்கிறது. அதை அடக்கியாளக் கற்றுக் கொண்டால் வாழ்வு சிறக்கும்.
* பாராட்டிற்கும், பழிக்கும் செவி சாய்த்தால் மகத்தான செயல் எதையும் சாதிக்க முடியாது.
* இயற்கைக்கு பணிந்து போக வேண்டாம். அதை வெல்லவே நாம் மனிதனாகப் பிறந்திருக்கிறோம்.
- விவேகானந்தர்