/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கராத்தே பயிற்சி பள்ளி பெயர் பலகை திறப்பு
/
கராத்தே பயிற்சி பள்ளி பெயர் பலகை திறப்பு
ADDED : பிப் 10, 2026 05:00 AM

புதுச்சேரி: சர்க்கிள் தி பாண்டிச்சேரி வளாகத்தில் கராத்தே பயிற்சி பள்ளியின் பெயர் பலகை திறப்பு விழா நடந்தது.
சர்க்கிள் தி பாண்டிச்சேரியில் டென்னிஸ், டேபிள் டென்னிஸ் பில்லியட்ஸ், பெத்தாங் போன்ற பல்வேறு விளையாட்டுகளில் உறுப்பினர்கள் தினமும் பயிற்சி பெற்று வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, சிறுவர் சிறுமியர் மற்றும் பெரியவர்களுக்கு உடலும், மனமும் வலிமை பெற கராத்தே பயிற்சி பள்ளி துவக்கப்பட்டுள்ளது.
கராத்தே பயிற்சி பள்ளியின் பெயர் பலகையை, சர்க்கிள் தி பாண்டிச்சேரி நிர்வாகிகள் திறந்து வைத்தனர். கராத்தே பயிற்சி பள்ளியின் நிறுவனர் சர்வதேச நடுவர் ஜோதிமணி வாழ்த்தி பேசினார். பள்ளியின் தலைவர் சிவப்பிரகாசம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

