தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஸ்பெஷல்/லைப் ஸ்டைல்/ஆரோக்கியம்/இனிப்பு சாப்பிடாமலே ரத்த சர்க்கரை ஏன் அதிகரிக்கிறது? 

இனிப்பு சாப்பிடாமலே ரத்த சர்க்கரை ஏன் அதிகரிக்கிறது? 

இனிப்பு சாப்பிடாமலே ரத்த சர்க்கரை ஏன் அதிகரிக்கிறது? 


UPDATED : ஆக 31, 2026 07:38 AM

ADDED : ஆக 29, 2026 04:11 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 31, 2026 07:38 AM ADDED : ஆக 29, 2026 04:11 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இனிப்பு சாப்பிட்டால் மட்டுமே சர்க்கரை அளவு உயரும் என்பது தவறான நம்பிக்கை. இனிப்பு சாப்பிடாவிட்டாலும் மன அழுத்தம், தூக்கமின்மை, உடற்பயிற்சி இல்லாமை போன்ற காரணங்களால் ரத்தத்தில் சர்க்கரை அளவு உயர செய்யலாம்.

முக்கிய காரணங்களை இங்கு அறிந்துகொள்ளலாம்.

பொதுவாக, சாக்லேட், இனிப்பு, கேக், குளிர்பானம் போன்றவற்றை சாப்பிட்டால்தான் ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கும் என்று பலர் நினைக்கின்றனர். ஆனால், அது முழுமையான உண்மையல்ல. இனிப்பு சாப்பிடாதவர்களுக்கும் ரத்த சர்க்கரை அதிகரிக்கலாம். இதற்கு காரணம், ரத்த சர்க்கரை அளவை உணவு மட்டுமல்ல; இன்சுலின் செயல்பாடு, கல்லீரல், மன அழுத்தம், தூக்கம், உடல் இயக்கம் உள்ளிட்ட பல காரணிகளும் பாதிக்கின்றன.

ரத்த சர்க்கரை இனிப்பால் மட்டும் அதிகரிக்காது!


இன்சுலின் என்பது ரத்த ஓட்டத்தில் உள்ள குளுக்கோஸை உடலின் செல்களுக்குள் கொண்டு செல்ல உதவும் ஒரு ஹார்மோன் ஆகும். ஆனால் இன்சுலின் எதிர்ப்பு ஏற்பட்டால், செல்கள் இன்சுலினுக்கு சரியாகப் பதிலளிப்பதை நிறுத்துகின்றன.

இதன் விளைவாக ரத்தத்தில் சர்க்கரை அளவு படிப்படியாக அதிகரிக்கிறது.இன்சுலின் எதிர்ப்பு ஏற்படுவதற்கு அதிக உடல் எடை, உடல் உழைப்பு இல்லாமை, தூங்காமல் இருப்பது, மன அழுத்தத்தில் இருப்பது மற்றும் மரபணு என பல காரணங்கள் உள்ளன.

கல்லீரல் அதிகப்படியான குளுக்கோஸை வெளியிடுதல் நாம் சாப்பிடாத நேரங்களிலும் உடலுக்கு சக்தி தேவைப்படுகிறது. அதற்காக கல்லீரல் குளுக்கோஸை உற்பத்தி செய்து அல்லது சேமித்து வைத்திருப்பதை வெளியிடுகிறது.ஆனால், நீரிழிவு அல்லது இன்சுலின் எதிர்ப்பு உள்ளவர்களில், இந்த செயல்முறையின் கட்டுப்பாடு பாதிக்கப்படலாம். இதனால் கல்லீரல் அதிக குளுக்கோஸை வெளியிடுவதால், சிலருக்கு வெறும் வயிற்றில் ரத்த சர்க்கரை அதிகமாக இருக்கலாம்.

மன அழுத்தம்

மன அழுத்தம் ஏற்பட்டால் உடலில் கார்டிசோல் மற்றும் அட்ரினலின் போன்ற ஹார்மோன்கள் அதிகமாக சுரக்கின்றன.இந்த ஹார்மோன்கள் கல்லீரல் குளுக்கோஸை உற்பத்தி செய்து ரத்தத்தில் வெளியிடுவதை அதிகரிக்கக்கூடும். இதனால் மன அழுத்தம் அல்லது கவலை உள்ள சமயங்களில் உணவு உண்ணாமலேயே ரத்த சர்க்கரை உயரலாம்.

தூக்கமின்மை

தொடர்ச்சியாக போதிய தூக்கம் இல்லாதது, உடலில் இன்சுலின் செயல்பாட்டை பாதித்து, ரத்த சர்க்கரை கட்டுப்பாட்டில் மாற்றங்களை ஏற்படுத்தக்கூடும். மேலும், தூக்கக் குறைபாடு கார்டிசோல் போன்ற மன அழுத்த ஹார்மோன்களின் அளவையும் அதிகரிக்கலாம். இதனால், சிலருக்கு ரத்த சர்க்கரை அளவு உயர வாய்ப்புள்ளது.

உடற்பயிற்சி இல்லாமை மற்றும் அதிக உடல் எடை

தசைகள் ஆற்றலுக்காக குளுக்கோஸை பயன்படுத்துகின்றன. தொடர்ச்சியான உடற்பயிற்சி இல்லாதது, தசைகள் குளுக்கோஸை பயன்படுத்தும் திறனை குறைத்து, காலப்போக்கில் ரத்த சர்க்கரை கட்டுப்பாட்டை பாதிக்கக்கூடும். குறிப்பாக வயிற்றுப் பகுதியில் அதிக கொழுப்பு இருப்பது, இன்சுலின் எதிர்ப்புக்கு வழிவகுத்து ரத்த சர்க்கரை அளவை உயர்த்தலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us