sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 23, 2025 ,கார்த்திகை 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

நலம்

/

வயதான தோற்றத்தை தடுக்கும் அபார வழி

/

வயதான தோற்றத்தை தடுக்கும் அபார வழி

வயதான தோற்றத்தை தடுக்கும் அபார வழி

வயதான தோற்றத்தை தடுக்கும் அபார வழி


PUBLISHED ON : அக் 07, 2014

Google News

PUBLISHED ON : அக் 07, 2014


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வயது அதிகரித்தால், சருமத்தில் சுருக்கமும் அதிகரிப்பது இயற்கையான ஒன்று தான். ஆனால் இன்றைய காலத்தில் இளம் தலைமுறையினர் பலருக்கு, விரைவிலேயே சருமத்தில் சுருக்கங்கள் ஏற்படுகிறது. இதனால் இளமையிலேயே முதுமையான தோற்றத்தில் காட்சியளிக்கிறார்கள்.



இப்பிரச்னைக்கு தீர்வு காண, பல்வேறு கிரீம்களை பயன்படுத்தி வருகிறார்கள். இருப்பினும் அவற்றால் எந்த ஒரு பலனும் கிடைப்பதில்லை. மாறாக, சருமத்தின் இயற்கை அழகு தான் பாதிக்கப்படுகிறது.



எனவே சருமத்தில் சுருக்கம் ஏற்பட்டால், அதனை போக்க இயற்கை நமக்கு தந்த அற்புதமான ஒரு பொருள் தான் கற்றாழை. கற்றாழையினால் சருமத்தில் உள்ள சுருக்கங்கள் மட்டுமின்றி, பல்வேறு பிரச்னைகளும் நீங்கும்.



கற்றாழையை சருமத்திற்கு பயன்படுத்தினால் கிடைக்கும் நன்மைகள்:



பட்டுப்போல மென்மை: கற்றாழையின் ஜெல்லை சருமத்திற்கு தினமும் தடவி, ஊற வைத்து கழுவி வந்தால், சருமத்திற்கு தேவையான வைட்டமின்கள் மற்றும் கனிமச் சத்துக்கள் கிடைத்து, சருமத்தின் ஆரோக்கியம் பாதுகாக்கப்படும். சருமம் மென்மையாக இருக்கும்.



பொலிவான சருமத்திற்கு: கற்றாழை ஜெல்லை சருமத்திற்கு பயன்படுத்தி வந்தால், அவை சருமத் துளைகளில் தங்கியுள்ள நச்சுக்கள் மற்றும் இறந்த செல்களை முற்றிலும் வெளியேற்றி, சருமத்தை பொலிவோடு வைத்துக் கொள்ளும்.



சிறந்த மாய்ஸ்சுரைசர்: கற்றாழை ஜெல்லை சிறந்த மாய்ஸ்சுரைசர் என்றும் சொல்லலாம். ஏனெனில் சருமத்திற்கு இதை அன்றாடம் பயன்படுத்தி வந்தால், சருமம் வறட்சி அடைவதைத் தடுக்கலாம். இதனால் சருமம் அழகாக மின்னும்.



சுருக்கங்கள் மாறி விடும்: தினமும் இரவில் படுக்கும் போது, கற்றாழை ஜெல்லை முகம் மற்றும் கண்களைச் சுற்றி தடவி வந்தால், சருமத்திற்கு தேவையான வைட்டமின்களான ஏ, ஈ மற்றும் சி போன்றவை கிடைத்து, சருமம் சுருக்கமடைவதைத் தடுக்கலாம். முக்கியமாக கண்களைச் சுற்றி தடவும் போது, கற்றாழையின் ஜெல், கண்களில் படாதவாறு பார்த்துக் கொள்ளுங்கள். ஏனெனில் இவை கண்களுக்கு பாதிப்பை ஏற்படுத்திவிடும்.



முதுமையை தள்ளிப்போடலாம்:



1:1 என்ற விகிதத்தில் கற்றாழை ஜெல்-போராக்ஸ் கலந்த நீரை எடுத்து, நன்கு கொதிக்க விட்டு, பின் குளிர வைத்து, அத்துடன் 1 கப் தேங்காய் எண்ணெய் சேர்த்து நன்கு கலந்து, பின் அந்த கலவையை சருமத்திற்கு பயன்படுத்தி வந்தால், அவை சுருக்கத்தையும், விரைவில் முதுமை தோற்றம் வருவதையும் தடுக்கும். இதுதான் பக்கவிளைவின்றி செயல்படும் 'ஆன்டி ஏஜிங்' சிகிச்சை பெறும் ரகசியம்.










      Dinamalar
      Follow us