PUBLISHED ON : ஆக 07, 2011

எனக்கு அடிக்கடி படபடப்பு ஏற்படுகிறது. இ.சி.ஜி., எடுத்து பார்த்ததில் எஸ்.வி.டி., என்ற வியாதி இருப்பதாகவந்துள்ளது. இது என்ன வியாதி? * எஸ். ராஜன், மதுரை
கு.ங.கூ., என்பது குதணீணூச் ஙஞுணtணூடிஞிதடூச்ணூ கூச்ஞிடதூஞிச்ணூஞீடிச் என்பதன் சுருக்கம். இதில் இருதய துடிப்பு மிகஅதிகமாக இருக்கும். இது பல்வேறு காரணங்களால் ஏற்படலாம். இதற்கு முதலாவதாக, 'அட்டிணிஞீச்ணூணிணஞு' அல்லது ஙஞுணூச்ணீச்ட்டிடூ போன்ற மருந்துகள் மூலம் துடிப்பை கட்டுப்பாட்டில் வைக்க முடியும். இதற்கு தற்போது கதீட்டர் மூலம், 'உடூஞுஞிtணூணி கடதூண்டிணிடூணிஞ்டிஞிச்டூ குtதஞீடிஞுண்' என்ற பரிசோதனை மூலம் எந்த குறைபாடு உள்ளது என அறிந்து சிகிச்சை அளிக்கலாம். இதற்கு 'கீச்ஞீடிணி ஊணூஞுணுதஞுணஞிதூ அஞடூச்tடிணிண' என்று பெயர்.
எனக்கு 6 மாதங்களாக ரத்தக்கொதிப்பு உள்ளது. இதற்காக கூஞுடூட்டிண்ச்ணூtச்ண மற்றும் அட்டூணிஞீடிணீடிணஞு போன்ற மருந்துகளை எடுத்து வருகிறேன். தற்போது காலில் வீக்கம் ஏற்பட்டு வருகிறது. இது எதனால்? * பி.ராமமூர்த்தி, சிவகாசி
காலில் வீக்கம் ஏற்பட பல காரணங்கள் உள்ளன. சிறுநீரக கோளாறு, இருதய கோளாறு, ரத்தத்தில் புரோட்டீன் குறைதல், கால் ரத்தக்குழாய் கோளாறு, வயிற்றுக் கோளாறுகள் போன்றவை முக்கியமானவை. சில மருந்துகளாலும் இப்படி காலில் வீக்கம் ஏற்படலாம். உங்களுக்கு அம்லோடிப்பின் மாத்திரையால் ஏற்பட்டு இருக்கலாம். எனவே டாக்டரிடம் ஆலோசனை பெற்று இந்த மாத்திரையை நிறுத்திவிட்டு, வேறு ரத்தக் கொதிப்பு மாத்திரையை எடுத்துக் கொண்டால் கால்வீக்கம் குறையும்.
ரத்தக்கொதிப்பால் இருதயம் பாதிக்குமா? * க. வேலு, வத்தலகுண்டு
சாதாரணமாக ரத்தஅழுத்தம் 120/80 என்ற அளவில் இருக்க வேண்டும். இது 140/90 என்பதை மீறினால் உயர் ரத்த அழுத்தம் அல்லது ரத்தக்கொதிப்பு உள்ளது என்று பொருள். இது பல வழிகளில் உடலின் உள்ளுறுப்புகளை பாதிக்கிறது. குறிப்பாக மூளை, சிறுநீரகம், கண்கள் மற்றும் இருதயத்தை பாதிக்கிறது. இருதயத்தை பொறுத்தவரை மாரடைப்பு, ஹார்ட் பெயிலியர், இருதய தசைவீக்கம், வால்வில் ரத்தக்கசிவு போன்றவை முக்கியமானவை. உயர்ரத்த அழுத்தத்தை அலட்சியமாக எடுத்துக் கொள்ளக் கூடாது. ஏனெனில் இது அமைதியாக எந்த அறிகுறியையும் வெளிப்படுத்தாமல் பல உறுப்புகளை கொடூரமாக பாதிக்கிறது. இதற்கு வாழ்க்கை முறை மாற்றம், தினமும் உடற்பயிற்சி, மனதை நிம்மதியாக வைத்துக் கொள்ளுதல், மருந்து மாத்திரைகளை தொடர்ந்து முறையாக எடுத்துக் கொண்டால் இக்கொடூர வியாதியை கட்டுப்பாட்டில் வைக்க முடியும்.
எனக்கு சமீபத்தில் பக்கவாதம் போன்ற பாதிப்பு ஏற்பட்டது. பரிசோதனை செய்ததில், 'இச்ணூணிtடிஞீ அணூtஞுணூதூ'ல் 80 சதவீத அடைப்பு என வந்துள்ளது. நான் என்ன செய்ய வேண்டும்? * பி. ராஜேந்திரன், திண்டுக்கல்
இருதயத்தில் செல்லும் ரத்தநாளங்களில் எப்படி அடைப்பு ஏற்படுகிறதோ, அதேபோல மூளைக்கு செல்லும் ரத்தக் குழாயான 'இச்ணூணிtடிஞீ அணூtஞுணூதூ'லும் அடைப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. இதற்கு பலூன் மற்றும் ஸ்டென்ட் சிகிச்சை மூலம் எளிதில் அடைப்பை அகற்றிவிட முடியும். இத்துடன் இருதயம் நோய்க்கு போன்றே தொடர்ந்து வாழ்நாள் முழுவதும் மாத்திரை எடுத்துக் கொள்வது அவசியமாகும்.
- டாக்டர் சி.விவேக்போஸ், மதுரை

