sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 29, 2025 ,மார்கழி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

நலம்

/

'தாய்ப்பாலும் ஒருவித தடுப்பூசியே!' மகப்பேறு நிபுணர் தகவல்

/

'தாய்ப்பாலும் ஒருவித தடுப்பூசியே!' மகப்பேறு நிபுணர் தகவல்

'தாய்ப்பாலும் ஒருவித தடுப்பூசியே!' மகப்பேறு நிபுணர் தகவல்

'தாய்ப்பாலும் ஒருவித தடுப்பூசியே!' மகப்பேறு நிபுணர் தகவல்


PUBLISHED ON : ஆக 08, 2020

Google News

PUBLISHED ON : ஆக 08, 2020


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

'முழுமையாக தாய்ப்பால் அருந்திய குழந்தைகளே நோய்நொடி இல்லாமல் ஆரோக்கியமாக வளர்கிறார்கள். குழந்தைகளை நோய்த்தொற்றுகளில் இருந்து பாதுகாக்கும் முக்கிய தடுப்பூசி தாய்ப்பாலே' என்கிறார் சரண் மருத்துவமனையின் கருத்தரித்தல் மற்றும் மகப்பேறு நிபுணர் மணிமேகலை.

தாய்ப்பாலின் அவசியத்தை உணர்த்தும் விதமாக ஆண்டுதோறும் ஆக., முதல் வாரம் தாய்ப்பால் வார விழாவாக உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு, போயம்பாளையம் சரண் மருத்துவமனையில் தாய்மார்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.

டாக்டர் மணிமேகலை கூறியதாவது:குழந்தைகள் பிறந்து ஒரு மணி நேரத்தில் இருந்து தாய்ப்பால் கொடுப்பது கட்டாயம். முதல் ஆறு மாதங்களுக்கு தாய்ப்பால் மட்டுமே பிரதான உணவாக இருக்க வேண்டும். அதன்பிறகு, 2 வயது வரை திட உணவோடு சேர்த்து தாய்ப்பால் கொடுக்க வேண்டும். இதுவே குழந்தைகளுக்கான முக்கிய நோய்த்தடுப்பு அரண்.

குழந்தைகளுக்கு இரும்புச்சத்து, கால்சியம் சத்துடன் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. மூளை செயல்திறனை அதிகரிக்க உதவுகிறது. தாய்ப்பால் கொடுப்பதன் மூலம் தாய்மார்களுக்கு மார்ப்பு மற்றும் சினைப்பை புற்றுநோய் பாதிப்பு ஏற்படுவதில்லை. குழந்தை பிறந்ததும், தேன், சர்க்கரை தண்ணீர் கொடுக்க கூடாது.இவ்வாறு, அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us